“15 வருட நிறைவு”- உற்சாகத்திலிருக்கும் அனுஷ்கா ஷெட்டி ரசிகர்கள்

  • July 22, 2020 / 09:11 PM IST

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 22 ஜூலை 2005 ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான “சூப்பர்” என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுஷ்கா ஷெட்டி.

இவர் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றோடு 15 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த சந்தோஷமான நிகழ்வை அனுஷ்கா செட்டி ரசிகர்கள் #15YearsOfAnushkaShettyReign என்ற ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி வருகிறார்கள். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஹாஷ்டேக் இதற்கு முன்னர் பிறந்தநாள் அல்லாது வெளியான நடிகைகளின் பதிவுகளை முறியடித்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனுஷ்கா ஃபேன் கிளப் நடிகை அனுஷ்காவை தொடர்புகொண்டு பகிர்ந்துள்ளார்கள்.

அதற்கு அவர் கூறியுள்ளதாவது, “உங்கள் அளவில்லாத அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. எப்பொழுதுமே உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்”என்றிருக்கிறார்.

தமிழில் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “ரெண்டு” படம் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால் மற்றும் பிரமாண்ட திரைப்படமான பாகுபலி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷெட்டி, தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது தமிழில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கில் “நிசப்தம்” என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது. இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் வெளியாகும் என்று திரைப்பட குழு தெரிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus