தூத்துக்குடியில் தனுஷின் ‘கர்ணன்’ ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

  • April 15, 2021 / 09:27 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வந்தார்.

மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லக்ஷ்மி ப்ரியா, லால், நட்டி, ஜி.எம்.குமார் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடியில் உள்ள ‘கணபதி’ என்ற திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற ரசிகர்கள் சிலர் மது போதையில் இருந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அத்திரையரங்க நிர்வாகத்தினர் அவர்களை படம் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கடுப்பான அந்த நான்கு நபர்களும், மீண்டும் வந்து திரையரங்க வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு காவல் நிலையத்தில் திரையரங்க நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus