ரஜினியின் முடிவுக்காக காத்திருக்கும் 5 இயக்குநர்கள் !

  • January 20, 2023 / 05:42 PM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . அண்ணாத்தே படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

ஜெயிலர் படத்தின் சென்னையில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது அதன் பிறகு கடலூரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது . ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . சில தினங்களுக்கு முன் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த தகவல் தினம் தினம் வலம் வந்து கொண்டு இருக்கிறது . அந்த வகையில் தற்போது விருமன் , கொம்பன் , உட்பட பல ஹிட் படங்களை கொடுத்த முத்தையா ரஜினியை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார் . ஆனால் இது வரை ரஜினி இந்த கதைக்கு பச்சை கொடி காட்டவில்லை என்று கூறப்படுகிறது .

இதுவரை இயக்குநர்கள் சிபி சக்கரவர்த்தி , பிரதீப் ரங்கநாதன் , ஜெய் பீம் ஞானவேல் , பி.வாசு ஆகியோர் கதை கூறி உள்ளனர் . ஆனால் ரஜினி இதுவரை எந்த கதைக்கும் ஓகே சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus