சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தான். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார், இதனை ‘ஸ்ரீ சூர்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.
‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
சித்தார்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சித்தார்த் நடிப்பில் ‘டக்கர், இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், சித்தார்த் சினிமாவுக்குள் நடிகராக களமிறங்கி 20 ஆண்டுகள் ஆகி விட்டதால் அதற்கு ரசிகர்கள் முன்னிலையில் ஒரு ஸ்பெஷல் ஃபங்க்ஷன் நடைபெற்றது. அந்த ஃபங்க்ஷனில் பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியும் கலந்து கொண்டு பேசினார். சுஜாதாவின் மனைவி வந்ததும், மேடையிலேயே கண் கலங்கி விட்டார் சித்தார்த்.
ஏனெனில், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சித்தார்த் இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் வாழ்ந்து வந்தார். ஆனால், அவர் ‘பாய்ஸ்’ படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க ரொம்ப பொருத்தமாக இருப்பார் என்று சுஜாதாவின் மனைவி இயக்குநர் ஷங்கரிடம் சொன்ன பிறகே, அவர் சித்தார்த்தை அழைத்து ஆடிஷன் செய்து பார்த்து ஃபிக்ஸ் பண்ணாராம்.