ஆயிரத்தில் ஒருவன் பாகம்2 விரைவில் எடுக்கப்படுமா..!

  • April 25, 2020 / 07:39 PM IST

இன்ஸ்டாவில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார்.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்களில் முக்கியமானது ஆயிரத்தில் ஒருவன். திரில்லர், சஸ்பென்ஸ், அட்வென்சர் என்று அனைத்தும் சேர்ந்த கலவையான இந்த படத்தை தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீண்ட நாள் படப்பிடிப்புக்கு பின் 2010-ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது. செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையில் ஜி.வி.பிரகாஷ் மிரட்டி இருப்பார், குறிப்பாக பழங்கால கருவிகளின் மூலமாக இசையமைத்து சாதனை படைத்திருப்பார். பல ஆண்டுகள் ஆன நிலையிலும், ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என சமூகவலைதளத்தில் விவாதம் நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜிவி.பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன்-2 பற்றி கூறியிருந்தார். செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இரண்டு பாகங்களாகவே எடுக்க நினைத்தார் என்றும், முதல் பாதி ஒரு பாகம், இரண்டாம் பாதி ஒரு பாகம் என ப்ளான் செய்தார் என கூறினார். அப்படி செய்திருந்தால் 3 அல்லது 4 பாகங்கள் வரை எடுத்திருக்கலாம். அந்த நேரத்தில் செல்வராகவனுக்கு சரியான அங்கிகாரம் கிடைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என அவர் தெரிவித்தார். மேலும் இப்படம் இரண்டாம் பாகம் செல்வராகவன் நினைத்தால் மட்டுமல்ல, நேரமும் கூடி வரவேண்டும் என கூறினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus