அறிவிப்பு வெளியாகி நின்று போன சூர்யா படங்கள் !

  • December 7, 2022 / 12:20 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் . மிக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் வெளியாக உள்ளது .

முன்னதாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்தார் . . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்து இருந்தனர் . இயக்குனர் பாலா வணங்கான் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய உள்ளார் அதனால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது . மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இயக்குனர் பாலா ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதில் நடிகர் சூர்யா அவர்களுக்கு இந்த வணங்கான் கதை பொருந்தாது அதனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார் மேலும் இருவரும் வேறு ஒரு படத்தில் மீண்டும் நிச்சயம் இணைவோம் என்று தெரிவித்தார் .
இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது .

இதற்கு முன்னதாகவும் சில முக்கிய இயக்குநர்களுடன் படம் ஆரம்பித்துவிட்டு பிறகு கைவிட்டார் சூர்யா .

2013- ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவும் – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களும் துருவ நட்சத்திரம் என்கிற படத்தை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது . ஆனால் இயக்குனர் கெளதம் நடிகர் சூர்யாவிடம் முழு கதையை கூறவில்லை என்றும் முழு கதையை முடித்துவிட்டு வரச்சொல்லி 6 மாதம் நேரம் கொடுத்தாலும் முழு கதையை கூறாத காரணத்தால் அந்த படம் அறிவிப்பு வெளியானது நின்று போனது .

2019 -ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா அருவா என்கிற படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வந்தது . இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் சில கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருந்தார் சூர்யா ஆனால் இயக்குனர் ஹரி செய்த மாற்றத்தில் சூர்யாவிற்கு கதையின் மேல் நம்பிக்கை வரவில்லை இதனால் அந்த படமும் அறிவிப்பு வெளியாகி நின்று போனது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus