லெஜெண்ட் சரவணன் எடுத்த அதிரடி முடிவு ! ஏமாற்றத்தில் ரசிகர்கள் !

  • October 21, 2022 / 07:47 PM IST

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து இருந்தார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தார்கள் . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் .

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி , பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் படத்தில் சரவணன் அருள் சண்டைக்காட்சிகளில் அனைவரையும் மிரட்டி இருந்தார் .

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . மேலும் படம் சுமாரான வசூலையும் பெற்றது . இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக முன்னணி சேனல் மற்றும் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது . தி லெஜண்ட்’ படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் – ரூ.45 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அடுத்து நடிக்கும் படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது . லெஜெண்ட் சரவணன் அடுத்த படம் காதல் மற்றும் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது . மேலும் முழுக்க முழுக்க படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் நடித்த ” தி லெஜெண்ட் ” படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து இருந்தனர் . ஆனால் தற்போது லெஜெண்ட் சரவணன் தனது படத்தை எந்த ஒரு ஓ.டி.டி நிறுவனத்துக்கும் விற்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus