நடிகர் அதர்வாவுக்கு காதல் தோல்வியா ?

  • November 25, 2022 / 11:54 PM IST

அதர்வா முரளி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். நடிகர் முரளியின் மகனும் இயக்குனர் எஸ்.சித்தலிங்கய்யாவின் பேரனுமான அதர்வா தனது திரை வாழ்க்கையை பானா காத்தாடி (2010) மூலம் தொடங்கினார். மேலும் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலாவின் படமான பரதேசி (2013) படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் .

பரதேசி படத்திற்கு முன் காதல் த்ரில்லர் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012) இல் மாயையால் அவதிப்படும் இளைஞனாக நடித்ததற்காக பாராட்டைப் பெற்றார். இயக்குனர் பாலாவின் தேயிலை தோட்டத்தில் அடிமையாக நடத்தப்பட்ட கிராமப்புற வாசியாக அவரது பாத்திரம் அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது இதற்காக அதர்வாவுக்கு தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம் பட்டது அரசன் . இந்த படம் இன்று வெளியாகி உள்ளது . இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து அதர்வா பேசினார் . அப்போது ரசிகர் ஒருவர் இன்னும் அதர்வா சிங்கிளாக இருப்பது ஏன் உங்களுக்கு காதல் தோல்வி இருக்கிறதா என்று கேட்கப்பட்டது அதற்கு அதர்வா கண்டிப்பாக சில காதல் கதைகள் இருக்கு. ஆனால் அதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் தான். இருந்தாலும் பெரிய அனுபவம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus