நற்செயல்களை செய்தவர்களுக்கு நன்றியை தாண்டியும் பெரும் கடமைப்பட்டுள்ளேன்… ‘ஜெயம்’ ரவியின் அறிக்கை!

  • September 11, 2020 / 05:33 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 10-ஆம் தேதி) ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இது தொடர்பாக ‘ஜெயம்’ ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த இக்கட்டான கால கட்டத்திலும் என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய திரைத்துறை நண்பர்கள், மீடியா நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக Common Dp, Video Mash Up, Painting, Motion Poster, Gana Song இன்னும் பல வழிகளில் வாழ்த்துக் கூறிய ரசிகர்களுக்கு என் அளவில்லாத நன்றி. ரத்ததானம், காவலர்களுக்கு முக கவசம், இயலாதவர்களுக்கு உதவி போன்ற நற்செயல்களை செய்தவர்களுக்கு நன்றியை தாண்டியும் பெரும் கடமைப்பட்டுள்ளேன். என் வேண்டுகோளுக்கிணங்க கூட்டம் சேராமல் தனி ஒருவனாக நின்று இவற்றையெல்லாம் செய்து உங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் அன்பில் திக்குமுக்காடினேன். இதற்கு என்ன கைமாறு செய்வேன் என அறியேன் !!! நல்ல படங்கள் மூலமாகத்தான் ரசிகர்களாக நீங்கள் கிடைத்தீர்கள். அதை தக்க வைப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன்ன்ன்…” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus