இயக்குனர் சசியின் துணை இயக்குனருடன் இணையும் நடிகர் ஜீவா!

  • October 20, 2020 / 10:30 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் கண்டிப்பாக நடிகர் ஜீவாவின் பெயரும் உண்டு. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மகனான ஜீவா அடுத்து சந்தோஷ் எனும் இயக்குனருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் பிரபல இயக்குனர் சசியின் துணை இயக்குனர் ஆவார். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்‌பி.சவுத்ரி தனது சூப்பர் குட் ஃபிலிம்ஸ நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்.

மேலும் இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகும் என்று செய்தி வந்துள்ளது.

நடிகர் ஜீவா கடைசியாக ‘ஜிப்ஸி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி கொரோனா காரணமாக அவ்வளவாக மக்களால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது. இதனால் இந்த திரைப்படம் அவ்வளவாக ரசிகர்களிடம் ரீச் பெறவில்லை.

இதைத்தொடர்ந்து நடிகர் ஜீவா ‘களத்தில் சந்திப்போம்’ மற்றும் ‘மேதாவி’ ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus