மீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி- உற்சாகத்தில் சிவகுமார் குடும்பம்!

  • October 20, 2020 / 10:13 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் தற்போது ஒருவராக விளங்கும் நடிகர் கார்த்தி தற்போது, தான் மீண்டும் அப்பாவான சந்தோஷத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன் ரசிகர்களுடன் கொண்டாடுகிறார்.

நடிகர் கார்த்தி அவரது அண்ணன் நடிகர் சூர்யா தந்தை சிவகுமார் அண்ணி ஜோதிகா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இவர்கள் குடும்பத்தில் இருக்கிறது. ஏற்கனவே சூர்யாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடிகர் கார்த்திக்கு உமையாள் என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த கார்த்தி மனைவி ரஞ்சனி தற்போது ஒரு மகனை பெற்றெடுத்துள்ளார். இந்த செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட நடிகர் கார்த்தி இந்த சமயத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த டாக்டர்களுக்கும் செவிழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கடைசியாக நடிகர் கார்த்தி பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் நடந்து முடிந்தது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/Karthi_Offl/status/1318551574222983171?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus