நடிகர் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை முடிந்தது!

  • November 16, 2020 / 06:57 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கார்த்தி சமீபத்தில் “சுல்தான்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கார்த்தி பிரம்மாண்டமாக உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தி தற்போது ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் அடுத்த ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த தீபாவளியன்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் படக் குழு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus