எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்ட வேடத்தில் நடிகர் கார்த்தி !

  • July 13, 2022 / 08:08 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க பலரும் முயன்று உள்ளனர் . அதில் மிக முக்கியமானவர் நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை அவர் எடுக்கலாம் என்ற முடிவில் இருந்தார் . பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டார் .ஆனால் அந்த படம் சில காரணங்களால் தொடங்காமல் போனது . தற்போது வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus