சூர்யா போல் நடிக்க விருப்பம் தெரிவித்த தெலுங்கு நடிகர் !

  • June 7, 2022 / 05:40 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தை டி.ஜே .ஞானவேல் இயக்கி இருந்தார் . இந்த படம் வெளியான பிறகு பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் எழுந்தது . உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் உண்மையான காவல் துறை அதிகாரியின் பெயரை மாற்றியது மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை காண்பித்த காரணமாக பல பிரச்சனைகள் எழுந்தன .

ஆனாலும் பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . இந்த படத்தில் நடித்த மணிகண்டன் , லிஜோமோல் ஜோஸ், சூர்யா என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் .

இந்நிலையில் 12வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கான விருதுகள் கிடைத்தது .சிறந்த திரைப்படம் மற்றும் ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. மேலும் ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவிலும் இந்த படம் விருதுகளை குவித்தது .

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாணி சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தபோது , என்னுடைய திரைப் பயணத்திலும் இப்படி ஒரு படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . இது போன்ற கதைகளை தெலுங்கிலும் சொல்ல விரும்புகிறேன் என்று நடிகர் நாணி தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus