பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

  • October 11, 2021 / 03:41 PM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெடுமுடி வேணு. இவர் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன்’, விக்ரமின் ‘அந்நியன்’, கார்த்திக் குமாரின் ‘பொய் சொல்ல போறோம்’, சிலம்பரசனின் ‘சிலம்பாட்டம்’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் நெடுமுடி வேணு தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளத்தில் 500 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus