நடிகை பூர்ணாவிற்கு போன் காலில் வந்த மிரட்டல்!

  • June 25, 2020 / 04:21 PM IST

“மஞ்சுபோல ஒரு பெண் குட்டி” படத்தில் 2004 ஆம் ஆண்டு மலையாள திரைப்படவுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. 2008 ஆம் ஆண்டு “முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு” படத்தின் மூலம் தமிழ்பட உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தமிழ் ,மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் கந்தகோட்டை, ஆடுபுலி வித்தகன், தகராறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷம்னா கசிம்.‌ கொரோனா லாக்டவுன் காரணமாக கேரளாவில் உள்ள தனது இல்லத்தில் தற்போது தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு போன் காலில் மிரட்டல் வந்ததாக புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து , 4 பேரை உடனடியாக கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள். இப்போது அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளார்கள். இந்த செய்தி கேரள திரைப்படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus