கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட நடிகர் ராதாரவி..!

  • May 14, 2020 / 01:15 PM IST

சென்னையிலிருந்து குடும்பத்துடன் கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்.

தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் ராதாரவி, அந்த காலம் தொடங்கி இன்றுவரை படங்களில் நடித்து கொண்டுள்ளார். மேலும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்து பேச்சாளராக உள்ளார். இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அவர் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தற்போது சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, இதனால் சென்னைவாசிகள் அனைவரும் கடும் பயத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த நடிகர் ராதாரவி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எம்.கைகாட்டியில் மார்வளா செல்லும் சாலையில் உள்ள தனது சொகுசு பங்களாவுக்கு வந்தார். அங்கு அவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் நடிகர் ராதாரவியின் சொகுசு பங்களாவுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் அனுமதி பெற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus