திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சிலம்பரசனின் அப்பாவும், இயக்குநருமான டி.ராஜேந்தர்!

  • May 24, 2022 / 01:28 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஒருதலை ராகம்’. இந்த படத்துக்கு பிறகு டி.ராஜேந்தர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதில் பல படங்களில் அவரே கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘கவண்’. இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தை பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் டி.ராஜேந்தரின் நடிப்பு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது.

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகன் தான் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் சிலம்பரசன் TR. தற்போது, நேற்று (மே 23-ஆம் தேதி) நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus