பரபரப்பு செய்தியால் செய்த டார்ச்சர்… சக நடிகர்களுடன் பேசுவதை நிறுத்திய ஹீரோ!

  • April 1, 2021 / 08:10 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அந்த கடவுள் நடிகர். சமீபத்தில், இவர் நடித்த புதிய படம் OTT-யில் ரிலீஸானது. ஸோம்பி பட இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக கடவுள் நடிகரின் மனைவியே நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார் அந்த கடவுள் நடிகர்.

இதற்கு காரணம் கடந்த மாதம் இவரை பற்றி வெளியான ஒரு பரபரப்பு செய்தி தான். ஜெர்மனில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ் பெண், லாக் டவுன் டைமில் கடவுள் நடிகர் தான் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், தன்னை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் என்னிடம் ஆசை வார்த்தை கூறியதுடன் ரூ.70 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும் வாங்கினார். இப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்வதோடு, என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று கூறி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுள் நடிகர் மீது புகார் கொடுத்தார் அந்த ஜெர்மனி பெண்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். இப்புகார் குறித்து இதுவரை கடவுள் நடிகர் எதுவும் பேசவே இல்லை. ஆகையால், இந்த செய்தி உண்மையாக இருக்குமோ? என்று சக நடிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. இதை பற்றி அந்த கடவுள் நடிகரிடம் அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார்கள். இதனால் இப்போது சக நடிகர்களுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம் கடவுள் நடிகர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus