இன்ஸ்டாவில் பிருத்விராஜ் மனைவி உருக்கமான பதிவு

  • May 8, 2020 / 07:08 PM IST

எப்போத் முடியும் ஊரடங்கு, டாடியை பார்க்க வேண்டும் என தனது மகள் கேட்பதாக மலையாள நடிகர் பிருத்விராஜ் மனைவி சுப்ரியா மேனன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு வேலை உள்ளவர்களை பல்வேறு சிக்கல்களில் சிக்க வைத்துள்ளது. ஏனெனில் திடீர் ஊரடங்கு அறிவிப்பு வேலை காரணமாக பல்வேறு நகரங்களுக்கு சென்றவர்களை சொந்த ஊருக்கு திரும்பி வரமுடியாமல் கட்டிபோட்டுள்ளது.இதேபொல் நடிகர் பிருத்விராஜ் தனது அடுத்த பெரிய மலையாள திரைப்படமான ஆடுஜீவிதத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டானுக்கு சென்றுள்ளார். படபிடிப்பு குழுவுடன் சிக்கியுள்ள அவர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் உள்ளார்.

இதனால் தனது குடும்பத்தை பிரிந்துள்ளதால் அவரது மகள் ஊரடங்கு எப்போது முடியும் என வருத்ததுடன் கேட்பதாக பிருத்வி ராஜின் மனைவி குடும்ப படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “தினமும் என் மகள் என்னிடம் கேட்கிறாள் ஊரடங்கு எப்போது முடியும்? இன்று அப்பா வருமா? பதிவிட்டுள்ளார். மேலும் பிருத்வியுடன் உடன் மீண்டும் இணைவதற்கு காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus