அனுஷ்கா ஷெட்டி எடுத்த அதிரடியான முடிவு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • October 1, 2020 / 03:00 PM IST

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் அறிமுகமான முதல் படத்தின் ஹீரோ மாதவன். ‘இரண்டு’ என்ற இந்த படத்துக்கு சுந்தர்.சி தான் இயக்குநர். இப்படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா மொபைலா’ என்ற பாடல் தான் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

அதன் பிறகு இரண்டாவது தமிழ் படமே முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அந்த படம் தான் ‘வேட்டைக்காரன்’. ‘வேட்டைக்காரன்’-க்கு பிறகு வந்த ‘சிங்கம்’ மெகா ஹிட்டானதும் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி 1&2’ என படங்கள் குவிந்தது.

அனுஷ்கா ஷெட்டி தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் ரெடியாகியிருக்கும் புதிய திரைப்படமான ‘சைலன்ஸ்’ நாளை (அக்டோபர் 2-ஆம் தேதி) ‘அமேசான் ப்ரைம்’-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை அனுஷ்கா ஷெட்டி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus