இன்ஸ்டாகிராமில் என்ட்ரியான நடிகை ஜோதிகா… முதல் பதிவு என்ன தெரியுமா?

  • August 31, 2021 / 03:29 PM IST

கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தவர் நடிகை ஜோதிகா. அதன் பிறகு அவரின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது. பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார். தற்போது, ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘உடன் பிறப்பே’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரவணன் இயக்கி வருகிறார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி நடிக்கின்றனர். இதனை ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து வருகிறார். இந்த படத்தை வருகிற அக்டோபர் மாதம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை ஜோதிகா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகை ஜோதிகாவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus