பொது இடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்த ப்ரபோஸல்!

  • July 28, 2020 / 07:46 PM IST

2015ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பிரபல நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2000 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானாசேர்ந்தகூட்டம், விக்ரமுடன் சாமி2, விஷாலுடன் சண்டக்கோழி 2, மீண்டும் விஜய்யுடன் சர்க்கார் போன்ற முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

தற்போது அறிமுக இயக்குனரான ஈஷாவர் கார்த்திக் இயக்கத்தில் “பெண்குயின்” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது.

சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பொது இடங்களிலும் அதிகமாக தென்படும் கீர்த்திசுரேஷ் கடை திறப்பு விழா, மேடை நிகழ்ச்சி போன்றவற்றில் பங்கேற்று வந்தார்.

அப்படி ஒரு விழாவிற்கு கீர்த்தி சுரேஷ் சென்றபோது அவர் முன் திடீரென ஒருவர் தோன்றி அவருக்கு காதல் கடிதத்தை கிஃப்டாக கொடுத்தாராம். அந்த கடிதத்தில் கீர்த்தி சுரேஷை அணுஅணுவாக ரசித்து எழுதியிருப்பார் போல. அதைப் படித்ததிலிருந்து இரவில் உறக்கமே வரவில்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். மேலும் தன் கண்முன் திடீரென்று தோன்றி இப்படி ப்ரபோஸ் செய்த அந்த நபரை மறக்கவே முடியாது என்று கீர்த்திசுரேஷ் கூறியிருக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus