‘வழக்கு எண் : 18/9’ பட நடிகைக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • April 21, 2021 / 07:18 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மனிஷா யாதவ். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘வழக்கு எண் : 18/9’. பாப்புலர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் மனிஷா யாதவ்வின் நடிப்பு அனைவரையும் லைக்ஸ் போட வைத்தது.

‘வழக்கு எண் : 18/9’ படத்துக்கு பிறகு நடிகை மனிஷா யாதவ்வுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை, சண்டிமுனி’ என படங்கள் குவிந்தது. மனிஷா யாதவ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

தற்போது, நடிகை மனிஷா யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை மனிஷா யாதவ்வின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus