ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை பட்ட நடிகை மீனா ! என்ன காரணம் தெரியுமா ?

  • October 3, 2022 / 01:27 AM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை , கேரளா ,கர்நாடகா , மும்பை டெல்லி என்று அடுத்து அடுத்து தொடர் பயணங்கள் செய்து வந்தனர் .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் இன்று ( செப்டம்பர் 30) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் . இதை பற்றி பேசி உள்ள நடிகை மீனா ” பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்று உள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு . அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது .இது எனக்கு பொறாமையாக உள்ளது . இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை ” என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus