“கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை”… 2-வது திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா!

  • December 5, 2022 / 01:32 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான தமிழ் படம் ‘நெஞ்சங்கள்’. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவை ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது திரையுலகம்.

தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’வில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இந்த படத்துக்கு பிறகு மீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன், அண்ணாத்த’ என படங்கள் குவிந்தது.

மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் ‘தெறி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

சமீபத்தில், மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவெடுத்திருப்பதாகவும், குடும்ப நண்பர் ஒருவர் தான் மாப்பிள்ளை என்றும் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது குறித்து மீடியாவுக்கு பேட்டி கொடுத்திருக்கும் மீனா “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. இரண்டாவது திருமணம் குறித்து நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus