சுதந்திரம் குறித்து நடிகை ஓவியாவின் பதிவு!

  • August 16, 2020 / 04:49 PM IST

2010ஆம் ஆண்டு வெளியான “களவாணி” படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஓவியா பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ் அடைந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அன்றிலிருந்து இவர் என்ன பேசினாலும் எதைப் பதிவிட்டாலும் அது வைரலாக இணையதளத்தில் பரவியது.

இந்நிலையில் ட்விட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் ஓவியாவை பலரும் அவர் கருத்துக்களை ஆதரித்து பதிவுகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடந்து வரும் சில பிரச்சனைகளை பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவுகளை வெளியிட்டு வரும் ஓவியா தற்போது சுதந்திரம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

“சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை எடுக்கப்படுவது” என்ற சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் ஓவியா. இதன்மூலம் சுதந்திரம் குறித்த தனது கருத்தை தனது ரசிகர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்க வேண்டுமா?, அதில் வரும் போட்டியாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளையும் இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus