திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது – நடிகை பூர்ணா!

  • July 29, 2020 / 10:54 PM IST

2004 ஆம் ஆண்டு வெளிவந்த “மஞ்சு போலொரு பெண்குட்டி” மலையாளப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூர்ணா என்கிற சம்னா குறிக்கல் குடியில். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் வெளியான “முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது அவர் திருமணத்தை நினைத்தாலே பயமாக உள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் பூர்ணாவிடம் ஒரு கும்பல் திருமண சம்பந்தம் பேசி பணமோசடியில் ஈடுபட்ட சம்பவம் படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பூர்ணா அளித்துள்ள பேட்டியில் “எனக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டு என் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தார்கள். அப்போது மோசடி கும்பல் பெண் கேட்டு அணுகி இரு குடும்பத்துடன் பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். நாங்கள் எப்படி வாழவேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசிவிட்டோம். அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டது. அதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. திருமணத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு பல நாட்களாகும் அதுவரை நடனத்தில் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus