‘பிக் பாஸ் 5’-யில் கலந்து கொள்ளப்போகிறாரா நடிகை பிரதாயினி?… அவரே சொன்ன தகவல்!

  • September 13, 2021 / 08:37 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சியில் ‘போதை ஏறி புத்தி மாறி’ படம் மூலம் ஃபேமஸான நடிகை பிரதாயினி கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வண்ணமிருந்தது. தற்போது, நடிகை பிரதாயினி இந்த தகவல் உண்மையல்ல என்பதை உறுதி செய்யும் வகையில் “ரியலாக பிக் பாஸில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus