இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிய பிரியா வாரியர் : கிண்டல்தான் காரணமா?

  • May 21, 2020 / 10:41 AM IST

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அந்தப் பாடலில் அவரது கண் சிமிட்டல் பலரையும் ஈர்த்தது. அதன் மூலம் சமூகவலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்த நிலையில் திடீரென வெளியேறியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டல்கள் அதிகரித்து வந்ததே அவர் வெளியேறியதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அவர் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இன்ஸ்டாகிராமைத் தவிர்த்து மற்ற சமூகவலைதளங்களில் அவர் நீடித்து வருகிறார்.

மலையாள இயக்குநர் பிரசாந்த் மாம்பூலி இயக்கத்தில் பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் கதை மற்றும் தலைப்பை மாற்றக்கோரி போனி கபூர் வழக்கு தொடர்ந்திருப்பதால், நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus