நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • December 22, 2020 / 04:37 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் நடித்த ‘புத்தகம், என்னமோ ஏதோ’ போன்ற தமிழ் படங்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பெரிதாக க்ளிக் ஆக வில்லை. அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ மற்றும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களும் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்புக்கு கோலிவுட் ஆடியன்ஸை லைக்ஸ் போட வைத்தது.

இவ்விரண்டு படங்களுக்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தேவ், NGK’ என தமிழ் படங்கள் குவிந்தது. ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை ராகுல் ப்ரீத் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus