ஆரம்பமானது ரெஜினா கசாண்ட்ராவின் புதிய பட ஷூட்டிங்… இயக்குநர் யார் தெரியுமா?

  • November 24, 2020 / 09:29 PM IST

கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.

2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தற்போது, ரெஜினா நடிப்பில் ஏழு தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ரா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘ஃப்ளாஷ் பேக்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘கொரில்லா’ பட இயக்குநர் டான் சான்டி இயக்குகிறார். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க உள்ளார். இதனை ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் நேற்று (நவம்பர் 23-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus