Sneha : இன்ஸ்டாகிராமில் தான் செய்யப்போகும் புதிய தொழில் குறித்து பதிவிட்ட சினேகா!

  • February 10, 2024 / 10:26 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மாதவனுடன் தான். அது தான் ‘என்னவளே’. இந்த படத்தை இயக்குநர் ஜே.சுரேஷ் இயக்கியிருந்தார். ‘என்னவளே’ படத்துக்கு பிறகு நடிகை சினேகாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, விரும்புகிறேன், கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல் ராஜா MBBS, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம், கோவா, உன் சமையல் அறையில், வேலைக்காரன், பட்டாஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

2012-ஆம் ஆண்டு பாப்புலர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது சினேகா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சினேகா சென்னையில் உள்ள தி.நகரில் ‘ஸ்னேஹாலயா சில்க்ஸ்’ என்ற பெயரில் பட்டுப் புடவை கடையை ஆரம்பிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags