நடிகை திரிஷா ஏற்றுக்கொண்டுள்ள புதிய சேலஞ்ச்!

  • October 3, 2020 / 07:54 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் நட்சத்திர நடிகையாக தமிழ் திரையுலகில் திகழ்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா அவ்வப்போது புகைப்படங்களை தன் ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார். சமீபத்தில் சமூக வலைத்தளத்திலிருந்து பிரேக் எடுத்து, பின்பு மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த திரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை தவிர இதர புகைப்படங்கள் அனைத்தையும் மொத்தமாக நீக்கிவிட்டார்.

தமிழ், மலையாளம் என்று படு பிஸியாக இருக்கும் நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக “ராம்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது கிரின் இந்தியா சேலஞ்சை ஏற்று புதிய செடிகளை நட்டு வைத்த திரிஷா அதேபோல தன் ரசிகர்களையும் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus