இயக்குனர்களை திருமணம் செய்த நடிகைகள்..!

  • April 18, 2020 / 04:36 PM IST

தமிழ் திரையுலகில் ஏராளமான காதல் ஜோடி பிரபலங்கள் உள்ளனர். நடிகர் நடிகை ஜோடி, தொழிலதிபர் நடிகை ஜோடி, சொந்ததிற்குள் திருமணம் செய்த ஜோடி இப்படி ஏராளமானோர் உள்ளனர். இதில் இந்த கட்டுரையில் நாம் பா்ர்க்கப்போவது இயக்குனர் – நடிகை ஜோடி குறித்து தான்.

பாக்யராஜ் – பூர்ணிமா

எம்ஜிஆரின் திரையுலக வாரிசு என்று அழைக்கப்பட்ட பாக்யராஜ் தன்னுடைய சக நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜுக்கு இது இரண்டாவது திருமணமாக இருந்தாலும் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அன்னியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன் சாந்தனு வளர்ந்து வரும் நடிகராக கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.

சுந்தர் சி – குஷ்பு

காமெடி படங்களுக்கு பெயர் போன சுந்தர் சி – குஷ்புவின் காதல் கதை உலகமறிந்தது. நீண்ட நாளாக காதலித்து வந்த இருவரும் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இயக்குனரான இவர் தனது மனைவி குஷ்பு வந்தவுடன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படங்களையும் தயாரித்து வருகிறார்.

வம்சி – ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை கடந்த 2003 ஜூன் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் நடிப்பை நிறுத்தாத ரம்யா, தென் தமிழகத்தின் ராஜ மாதாவாக கலக்கி வருகிறார்.

ஆர்கேசெல்வமணி – ரோஜா

குஷ்பு – சுந்தர் சியை போல இவர்கள் இருவரின் காதல் கதையும் மிக நீண்டது. குடும்பத்தினரின் ஆசியுடன் நீண்ட நாளுக்கு பின் திருமணம் செய்து கொண்ட இருவரும் இப்போது அவர் அவர்கள் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா

தெலுங்கு டப்பிங் படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது டாக்டர் ராஜசேகர் தான், எவனா இருந்தா எனக்கென்ன என்ற ஒரு படம் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் இவரின் ஆக்ரோஷமான நடிப்புதான். முன்னாள் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்ட அவர் பின்னாளில் தெலுங்கு திரையுலகிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

அட்லி – பிரியா

லேட்டஸ்ட் டிரெண்டிங் இயக்குனர் அட்லியும் துணை நடிகை பிரியாவும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரின் ஜோடி பொருத்தம் குறித்து சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டாலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் அன்னியோனியமாக வாழ்ந்து வருகின்றனர்.

ராஜ்குமார் – தேவயானி

வீட்டை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செய்து கொண்ட ஹீரோயின் என்றாலே தேவயானியின் பெயர் தான் முதலில் நினைவுக்கு வரும். இயக்குனரான ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், இரு மகள்களுடன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

பொன்வண்ணன் – சரண்யா

பாரதிராஜாவின் உதவி இயக்குனரான பொன்வண்ணனுக்கும் சரண்யாவுக்கு காதல் திருமணம் தான். கருத்தம்மா படப்பிடிப்பில் மலர்ந்த காதல், அதன் பின் திருமணத்தில் முடிந்தது. படத்தில் கணவன் மனைவியாக நடித்த இவரும் நிஜவாழ்க்கையிலும் கணவன் மனைவியாக ஆயினர்.

மணிரத்னம் – சுஹாசினி

மணிரத்னத்தின் திறமையை பார்த்த கமல்ஹாசன், தன் அண்ணன் மகளான சுஹாசினியை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த இயக்குனர் தம்பதியினர் சொந்த வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் இணைந்து பணியாற்றி சாதனை படைத்து வருகின்றனர்.

ஹரி – ப்ரீதா

ஹரி மற்றும் ப்ரீதா மற்றொரு வெற்றி ஜோடி, அல்லி அர்ஜுனா படத்தில் நடிக்கும் போது, சரணிடம் துணை இயக்குனாராக பணியாற்றிய ஹரியுடன் ப்ரீதாவுக்கு காதல் ஏற்பட்டது. பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைப்பிரியாத ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus