“பிக் பாஸ் ஷோ SCRIPTED-ஆ?”… எலிமினேட்டான பிறகு உண்மையை போட்டுடைத்த இசைவாணி!

  • November 24, 2021 / 12:40 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் அபிஷேக் ராஜா. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று (நவம்பர் 23-ஆம் தேதி) வைல்ட் கார்ட் மூலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி ஆனார். தற்போது, இன்ஸ்டா லைவ்வில் பேசிய இசைவாணியிடம் ரசிகர் ஒருவர் “பிக் பாஸ் ஷோ scripted-ஆ?” என்ற கேள்வியை கேட்டார். அதற்கு இசைவாணி “ஸ்க்ரிப்ட்லாம் இல்லை” என்று பதில் கூறியுள்ளார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus