பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா… இருவரும் என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?

  • March 2, 2022 / 09:30 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இரவு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் தனுஷும், ஐஸ்வர்யாவும் நேரில் சந்தித்தும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லையாம். இந்த செய்தி இவர்கள் இருவரும் எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus