‘விக்ரம்’ படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்

  • April 15, 2021 / 09:23 PM IST

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ ரிலீஸானது. இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது கமலை வைத்து இயக்கும் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், ‘விக்ரம்’ஐ தொடர்ந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து லோகேஷ் கூறிய கதையும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus