மணிரத்னம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறாரா?

  • August 26, 2020 / 10:31 PM IST

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது லாக்டோன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறதாம்.

சமீபத்தில் இந்த படத்தில் ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடிப்பதாக தகவல்கள் வந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் சரத்குமாருக்கு இந்தப் படத்தில் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நந்தினி மற்றும் மந்தாகினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும், பெரிய பழுவேட்டரையரின் காதலிதான் நந்தினி அப்படியானால் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார் என்ற செய்தியும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் மந்தாகினி கதாபாத்திரம் சுந்தரசோழனின் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. ரவிவர்மன் இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஏ.ஆர். ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus