“இந்த விஷயம் தான் என் சந்தோஷத்துக்கு காரணம்”… தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா போட்ட ஹேப்பியான போஸ்ட்!

  • March 12, 2022 / 05:44 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது, ‘MUSAFIR’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள பாடல் வீடியோவை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. கடந்த மார்ச் 7-ஆம் தேதி ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது, ஐஸ்வர்யா கையில் பூங்கொத்துடன் இருக்கும் ஸ்டில்லை இன்ஸ்டாகிராமில் ஷேரிட்டதுடன் “பூக்களை போன்று பெண்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் விஷயம் வேறு எதுவும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus