‘2.0’-வில் ‘பக்ஷி ராஜன்’ ரோலில் மிரட்டிய அக்ஷய் குமார்… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • July 11, 2022 / 07:29 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. 2018-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘2.0’. இந்த படத்தில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் பாலிவுட் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் அக்ஷய் குமார் ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus