ரன்பீர் கபூர் – அலியா பட் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

  • November 7, 2022 / 10:30 AM IST

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி, RRR’ என படங்கள் குவிந்தது. அலியா பட் நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘பிரம்மாஸ்திரா’ (முதலாம் பாகம் : ஷிவா).

இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.425.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது அலியா பட் ஹிந்தியில் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டார். தற்போது, ரன்பீர் கபூர் – அலியா பட் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அலியா பட்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus