கரோனா வாரியர்ஸ்க்கு கிஃப்ட் அனுப்பிய ஆலியா பட்?

  • May 22, 2020 / 06:31 AM IST

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் சாக்லேட், பழங்கள் ஆகியவற்றை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெருந்தொற்றான கரோனா வைரஸூக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஆலியா பட், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் சாக்லேட், ஸ்வீட் பன், பழங்கள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.

அதில் “தற்போது பொதுமக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க நீங்கள் செய்யும் பணி மிகப்பெரியது. நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அம்மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தனது சுட்டுரை பக்கத்தில், ‘ஸ்வீட், ஸ்நாக்ஸ் அனுப்பிய ஆலியா பட்டுக்கு நன்றி. இது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அனைத்து மருத்துவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இதுகுறித்து ஆலியா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இது ஆலியா தான் செய்தாரா அல்லது அவரது சார்பாக வேறு யாரேனும் செய்தார்களா என்பதும் புலப்படவில்லை.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus