அடேங்கப்பா… அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

  • December 18, 2021 / 02:57 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’. இதன் முதல் பாகம் நேற்று (டிசம்பர் 17-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளதாம். இதில் ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்ஜெய், ராவ் ரமேஷ், அனுஷயா பரத்வாஜ், அஜய் கோஷ் நடித்துள்ளனர். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலுக்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடனமாடியிருக்கிறார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.06 கோடியும், இந்திய அளவில் ரூ.45.45 கோடியும், உலக அளவில் ரூ.62.80 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus