5 மொழிகளில் தயாராகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… வெளியானது சூப்பரான தகவல்!

  • July 6, 2021 / 05:49 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘புஷ்பா’. இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், தனஞ்ஜெய், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனுஷயா பரத்வாஜ் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷலாக இந்த படத்தின் செம மாஸான டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் இன்று (ஜூலை 6-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus