தமிழ் சினிமாவை நான் தான் தாங்கிபிடிச்சி இருக்கேனா ?

  • November 18, 2022 / 02:15 AM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .


இந்நிலையில் உதயநிதி மாமன்னன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது . இதைப்பற்றி பேசிய உதயநிதி ” என்னமோ தமிழ் சினிமாவையே நான் தான் தாங்கி புடிச்சிட்டு இருக்கிற மாதிரி நடிக்கிறத நிப்பாட்டாதீங்க நடிக்கிறத நிப்பாட்டாதீங்க சொல்றாங்க ஆனா நான் இன்னும் நநடிக்கவே இல்லை என்று நகைச்சுவையாக கூறினார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus