இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் அம்ரிதா!

  • August 3, 2021 / 10:11 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அம்ரிதா ஐயர். ஆரம்பத்தில் ‘தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி’ போன்ற படங்களில் சின்ன ரோலில் வலம் வந்தார். அதன் பிறகு ‘படைவீரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் அம்ரிதா ஐயர்.

‘படைவீரன்’ படத்துக்கு பிறகு நடிகை அம்ரிதா ஐயருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் விஜய் ஆண்டனியின் ‘காளி’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வணக்கம்டா மாப்ள’ என தமிழ் மொழியில் படங்கள் குவிந்தது. நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ’30 ரோஜுல்லோ ப்ரேமிஞ்சதம் எலா’, ‘ரெட்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது இவர் நடிப்பில் தமிழ் மொழியில் ‘லிப்ட்’, கன்னட மொழியில் ‘கிரமாயனா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus