‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘அஞ்சான்’ பட நடிகை?…அவரே சொன்ன தகவல்!

  • August 14, 2021 / 12:54 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா சிங். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ரேனிகுண்டா’ திரைப்படம். ஜானி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். ‘ரேனிகுண்டா’ படத்துக்கு பிறகு நடிகை சஞ்சனா சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் பாதை, யாருக்கு தெரியும், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், இரவும் பகலும், தனி ஒருவன், சக்க போடு போடு ராஜா’ என படங்கள் குவிந்தது. திரைப்படங்களில் சஞ்சனா சிங் நடிக்கும் கேரக்டர்கள் நம் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சமீபத்தில், சஞ்சனா சிங் சென்னை வடபழனியில் ‘யம்மியோஷா’ என்ற பெயரில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் (YUMMIYOZA CHINESE RESTAURANT) ஆரம்பித்தார். இந்நிலையில், ஜீ தமிழில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தொகுத்து வழங்கப்போகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் நடிகை சஞ்சனா சிங் கலந்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக சஞ்சனா சிங் இன்ஸ்டாகிராமில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus