‘அண்ணாத்த’ பட நடிகைக்கு போனில் வந்த கற்பழிப்பு மிரட்டல்… கொல்கத்தா போலீஸாரிடம் புகார்!

  • August 6, 2020 / 04:54 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமான குஷ்பூ, அதன் பிறகு ‘வருஷம் 16, வெற்றி விழா, சின்ன தம்பி’ போன்ற பல படங்களில் நடித்தார். இப்போது ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ.

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

தற்போது, குஷ்பூ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு இந்த நம்பரில் இருந்து கற்பழிப்பு மிரட்டல் வந்த வண்ணமிருக்கிறது. அவரின் பெயர் சஞ்சய் ஷர்மா என்றும், கால் கொல்கத்தாவில் இருந்து வருவதாகவும் காட்டப்படுகிறது. கொகத்தா போலீஸ் கொஞ்சம் இதை என்னவென்று விசாரணை செய்யுங்கள்” என்று அந்த நம்பரையும் குறிப்பிட்டு கொல்கத்தா போலீஸின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus