அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

  • November 24, 2020 / 04:29 PM IST

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 22 ஜூலை 2005 ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான “சூப்பர்” என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுஷ்கா ஷெட்டி.

தமிழில் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “ரெண்டு” படம் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால் மற்றும் பிரமாண்ட திரைப்படமான பாகுபலி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷெட்டி, தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது தமிழில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இவருக்கு எப்போது திருமணமாகும் என்று பலர் எதிர்பார்த்து வரும் நிலையில் இவர் சமீபத்தில் திருமணமான நடிகர் ராணா டகுபதி உடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் எனவும் ஒரு வதந்தி பரவி வந்தது.

ஆனால் இதை முறியடிக்கும் விதமாக அனுஷ்கா ராணா டகுபதி கல்யாணத்திற்கு வாழ்த்துக் கூறி ப்ரோ என்று குறிப்பிட்டு இணையதளத்தில் பதிவிட்டார். இதன் மூலம் இவர்களுக்கு இடையே காதல் இல்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus